தூக்கத்தில் கண்களை ஏதோ கடிப்பதுபோல் தெரியவே பதறிப்போய் கண் விழித்துள்ளார் ஒர் அவுஸ்திரேலிய பெண். பார்த்தால், எலி ஒன்று அவரது கண்களை சுவைத்துக்கொண்டிருந்திருந்திருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கேட்பதற்கு நம்ப முடியாத விடயமாக இது தோன்றலாம். ஆனால், உண்மையாகவே அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன எலிகள், ஒன்றல்ல இரண்டல்ல, பல மில்லியன் எலிகள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண். Mick Harris என்னும் விவசாயி, தன் முகத்தின்மீது […]

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை பிரதேச செயலாளர் அலுவலக அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை […]

மனைவியை கைகளில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் சேர்ந்த கணவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ஹினிதும பிரதேசத்தின் கொடிகந்த பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பற்றியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் எஸ்.குமார என்ற இளைஞர் தனது மனைவியை 22 கிலோ மீற்றர் தூரம் […]

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 31 இற்கும் அதிகமான […]

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவையும் இளைஞர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பச்சை குத்தியுள்ள அவ் இளைஞன் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பயணக்காட்டுப்பாட்டை மீறி, நோய்வாய்ப்பட்டிருந்த கால்நடை ஒன்றுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற போலி கால்நடை வைத்தியர் ஒருவரை பொகவந்தலாவ காவல்துறையினர் நேற்று(13) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினk; கொட்டகலையிலிருந்து பொகவந்தலாவ பிரதேசத்துக்கு குறித்த சந்தேகநபர் சென்றிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தோட்டப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்களிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து பணம் பெற்றுவந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.எனினும் பயணக்கட்டுப்பாட்டை […]

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவருக்கு காய்ச்சல் உட்பட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திலும் அதற்கு நெருக்கமாக உள்ள சிலருக்கும் […]

சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறப்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ள அதேவேளைஇ சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில்இ மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில்இ ஒன்லைன் முறைமையின் ஊடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவலொன்று பகிரப்பட்டு வந்தது. எனினும்இ இந்த முறையினூடாக மதுபானம் […]

Today Political Cartoons of Sri Lanka