கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், சஞ்ஜாரி விஜயின் […]

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் […]

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்இ இன்று முதல் பாண்இ பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ பெரும் பிரச்சினைகள் இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்தது. அரசாங்கத்தின் தவறான […]

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு சலுகையில் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, […]

நாளாந்த கொவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய முறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த தினங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களும்இ அவை கொவிட் மரணங்களா என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அறிக்கை பிறிதொரு நாளில் வெளியிடப்பட்டு வந்தது. இதில் சில குழப்பநிலை காணப்பட்டதால் இன்று முதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் […]

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை மேலும் சில காலங்களிற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா?இ இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை பயணக்கட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்களும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும் குறித்த எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை […]

அனுமதிக்கும் அதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் […]

முல்லைத்தீவு நகர் பகுதியில் பயண அனுமதியைப் பெற்று மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் சாராய போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளார்கள். மேலும் வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதினை உடைய இளைஞனே […]

Today Political Cartoons of Sri Lanka