கொரோனாவுக்கு அன்பு மகனைப் பறிகொடுத்த பிரபல நடிகை கவிதா – தீவிர சிகிச்சையில் கணவர்!!!

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங், அரசியல் பணிகளுக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் நடிகை கவிதா.

‘நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ சீரியல்களில் நடித்தவருபவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகையான கவிதா தன் மகன் சாய் ரூப்பை கொரொனா தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளார்.

தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவிதா. ’ஆட்டுக்கார அலமேலு’, ‘நாடோடித் தென்றல்’, ‘அமராவதி’ ஆகியவை இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தெலுங்குத் திரையுலகில் அதிகம் அறியப்பட்டவர்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தவர் பிறகு சீரியல் பக்கம் வந்தார். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’என்றென்றும் புன்னகை’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இன்னொருபுறம் ஆந்திர அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங், அரசியல் பணிகளுக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் கவிதா. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் இவரது கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் இவரது மகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கடைசியில் நேற்று அவர் மரணமடைந்து விட்டார். கவிதாவின் கணவர் தசரத ராஜ் தற்போதும் சிகிச்சையில்தான் இருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடிகை கவிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Next Post

தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!

Wed Jun 16 , 2021
Post Views: 375 வவுனியா – கற்குளி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது அவர் கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் (வயது 51) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் […]

Today Political Cartoons of Sri Lanka