நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை..!!

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Next Post

முடக்கப்பட்ட யாழ் நகர்ப்பகுதியில் தடைமீறும் செயல் குறித்து பொதுமக்கள் விசனம்..!!!

Sat Jun 26 , 2021
Post Views: 1,076 தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கடந்த நாட்கள் முடக்கப்பட்ட யாழ் நகரப் பகுதியான குருநகர், பாசையூர் பகுதிகள் அறிவிக்கப்பட்டது. இப் பகுதிகளுள் உட் செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி அற்ற நிலையில் சில இளைஞர்களும் முதியவர்களும் மாறி மாறி வெளித் திரிவதனை காணமுடிந்ததாக தெரிய வருகின்றது. இந்நிலையில் வெளிச்செல்லும் இப் பகுதியைச் சேர்ந்த மக்களால் சுகாதார பாதுகாப்பற்ற நிலையில் கொரோணா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அயலில் வசிக்கும் மக்கள் […]

Today Political Cartoons of Sri Lanka