யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவருக்கு காய்ச்சல் உட்பட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திலும் அதற்கு நெருக்கமாக உள்ள சிலருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த மேலும் இரண்டு பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தேனீர்ச் சாலை நடத்தும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.