பருத்தித்துறைப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா தொற்று ..!!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவருக்கு காய்ச்சல் உட்பட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திலும் அதற்கு நெருக்கமாக உள்ள சிலருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த மேலும் இரண்டு பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தேனீர்ச் சாலை நடத்தும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Post

இலங்கையில் போலி மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Mon Jun 14 , 2021
Post Views: 270 பயணக்காட்டுப்பாட்டை மீறி, நோய்வாய்ப்பட்டிருந்த கால்நடை ஒன்றுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற போலி கால்நடை வைத்தியர் ஒருவரை பொகவந்தலாவ காவல்துறையினர் நேற்று(13) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினk; கொட்டகலையிலிருந்து பொகவந்தலாவ பிரதேசத்துக்கு குறித்த சந்தேகநபர் சென்றிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தோட்டப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்களிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து பணம் பெற்றுவந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகநபர் […]

Today Political Cartoons of Sri Lanka