மகனால் கோடரி தாக்குதலுக்கு இலக்காகிய தாய் – அதிர்ச்சி சம்பவம்…!!

போதைக்கு அடிமையான மகனால் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயம் அடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை பாலதோட்டவில் வசிக்கும் அனுலா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி சமைத்துக்கொண்டிருந்த தாயை சந்தேகநபரான மகன் கோடரியால்அடித்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சந்தேக நபரின் மகன் கைது செய்யப்பட்டு ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Next Post

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி..!!

Mon Jul 12 , 2021
Post Views: 1,018 யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த லெக்பீஸை முகநூலில் பதிவேற்றியதுடன் அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார். அதாவது காசை இவ்வாறு வீணடித்து ஒன்லைனில் உணவு வாங்க விரும்புபவர்கள் தன்னை போல ஏமாறவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Today Political Cartoons of Sri Lanka