இலங்கை வந்தடைந்த பசில் – எரிபொருள் விலை குறைப்பு???

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளார்.

அவர் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்கும் மேலாக அமெரிக்காவில் தனிப்பட்ட பயணம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ இலங்கையில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருக்காதென உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Next Post

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன..!!

Thu Jun 24 , 2021
Post Views: 732 யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் […]

Today Political Cartoons of Sri Lanka