பயணக்காட்டுப்பாட்டை மீறி, நோய்வாய்ப்பட்டிருந்த கால்நடை ஒன்றுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற போலி கால்நடை வைத்தியர் ஒருவரை பொகவந்தலாவ காவல்துறையினர் நேற்று(13) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தினk; கொட்டகலையிலிருந்து பொகவந்தலாவ பிரதேசத்துக்கு குறித்த சந்தேகநபர் சென்றிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தோட்டப்பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்களிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து பணம் பெற்றுவந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பயணக்கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.