ஒரு மாதமாக நீடிக்கும் பயணக்கட்டுப்பாட்டு நிலைமையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, ஹட்டன், வெலிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர். வெலிஓயா பகுதியில் 6 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். […]
யாழில்.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த ஒருவரே யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் உயிரிழந்தவருடன் கடந்த இரு தினங்களில் யாழில் நான்கு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் , செய்ய முற்பட்ட 12, 14 வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 […]
கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை நேற்று உலகில் 9வது இடத்திற்கு வந்துள்ளது. கோவிட் தொற்று காரணமாக 124 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு மேலாக அமெரிக்கா 8வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்றைய தினம் கோவிட் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைய காலத்தில் அதிகளவில் கோவிட் மரணங்கள் ஏற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினம் இலங்கை அளவுக்கு மரணங்கள் ஏற்படவில்லை. கோவிட் […]
விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார். இவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில், நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவால் பதிவகப்பட்டு காலமாகி இருக்கிறார். இதை உருக்கத்துடன் நிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், […]
பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தமது முகவர்களுக்கு அறிவித்துள்ளது. பிரிமா நிறுவனத்தின் 50 கிலோ கிராம் எடை கொண்ட மில்க் பிரேன்ட் கோதுமை மா பொதி 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய விலையேற்றத்தின்படி இன்று முதல் அதன் விலை […]
இலங்கையில் ஒவ்வொரு 100 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரில் ஒரு வீதத்தினர் மரணிப்பதாகவும் உலக நாடுகளின் கோவிட் தரவுகளை வெளியிட்டு வரும் “வேர்ள்ட் மீற்றர்” இணையத்தளம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இந்த வாரத்தில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன […]