தூக்கத்தில் கண்களை எதுவோ கடிப்பதுபோல் தெரிய பதறி எழுந்த பெண்- பரபரப்பான திக் திக் நிமிடங்கள்….!!!

தூக்கத்தில் கண்களை ஏதோ கடிப்பதுபோல் தெரியவே பதறிப்போய் கண் விழித்துள்ளார் ஒர் அவுஸ்திரேலிய பெண். பார்த்தால், எலி ஒன்று அவரது கண்களை சுவைத்துக்கொண்டிருந்திருந்திருக்கிறது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கேட்பதற்கு நம்ப முடியாத விடயமாக இது தோன்றலாம்.

ஆனால், உண்மையாகவே அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன எலிகள், ஒன்றல்ல இரண்டல்ல, பல மில்லியன் எலிகள்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண். Mick Harris என்னும் விவசாயி, தன் முகத்தின்மீது ஏதோ ஓடுவதை உணர்ந்து பதறி விழித்திருக்கிறார்.

பார்த்தால் அதுவும் ஒரு எலி. அவரது மனைவியின் மோதிர விரலை சுவைக்க முயன்றிருக்கிறது மற்றொரு எலி. அவுஸ்திரேலியாவில் எலித்தொல்லையை தேசிய பேரழிவாக அறிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எலித்தொல்லையால் ஒரு வீடு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. கார்கள் பழுதாகியுள்ளன, பயிர்கள் நாசமாகியுள்ளன. வேறு வழியில்லாமல், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த ஒரு எலி விஷத்தை மக்களுக்கு இலவசமாக கொடுத்து எலித்தொல்லையை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

Next Post

நயினாதீவில் பரபரப்பு - அச்சத்தில் மக்கள்(கரை ஒதுங்கும் மருத்துவக் கழிவுகளால்)....

Mon Jun 14 , 2021
Post Views: 542 நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியக் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது. வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் நாளைய தினம் […]

Today Political Cartoons of Sri Lanka