மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் சில பகுதிகளில் மின்தடை..!!!

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Next Post

யாழில் எல்லை மீறிச்செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!!

Thu Jul 1 , 2021
Post Views: 397 யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை – 10, தெல்லிப்பழை வைத்தியசாலை – 01, பருத்தித்துறை வைத்தியசாலை – 06, […]

Today Political Cartoons of Sri Lanka