புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய போதும் மயங்கி விழுந்துள்ள நிலையில் பலரும் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய மகளை குத்தி கொலை செய்த சம்பவத்தில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார். அதுமட்டுமின்றி, Sutha Karunanantham படுகாயங்களுடன் வீட்டில் […]

பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்த நபரின் மகன் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்த நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன்,இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார். 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் […]

நாடளாவிய ரீதியில் சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 50 பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். எனினும் கொரோனா தொற்றுநோயால் 11 தாய்மார்கள் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார் இந்த நிலையில் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு […]

வீதியால் பயணிப்போரை கருங்குளவிகள் மற்றும் காகங்கள் என்பன துரத்தித் தாக்குவதாகவும் அதனால் குறித்த வீதியால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி – தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த வீதியை தென்மராட்சி தெற்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்களும் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) பிரதான வீதிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். வீதியோரத்தில் காணப்படும் […]

நாடு முழுவதிலும் இனியும் பயணத்தடை விதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என அவர் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை […]

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலை இலங்கை மதுவரித்திணைக்களம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.

Today Political Cartoons of Sri Lanka