புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பலர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இதுவரை 20 பேர் வரையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய போதும் மயங்கி விழுந்துள்ள நிலையில் பலரும் மற்றும் வீடுகளில் இருந்த பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.