இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை- மீட்கும் பணி தீவிரம்…

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Next Post

பைக் விபத்தில் பிரபல நடிகர் மரணம்- அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!!

Mon Jun 14 , 2021
Post Views: 221 கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. […]

Today Political Cartoons of Sri Lanka