தந்தையை தாக்கி கொலை செய்த மகன் – பேருவளையில் சம்பவம்…!!

பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்த நபரின் மகன் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்த நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன்,இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Post

லண்டனில் 5 வயது மகளை குத்தி கொலை செய்த இலங்கை தாய் - நடந்தது என்ன??

Sat Jun 26 , 2021
Post Views: 420 லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய மகளை குத்தி கொலை செய்த சம்பவத்தில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார். அதுமட்டுமின்றி, Sutha […]

Today Political Cartoons of Sri Lanka