20வயது இளைஞன் செய்த கீழ்த்தரமான செயல்..!!

முல்லைத்தீவு நகர் பகுதியில் பயண அனுமதியைப் பெற்று மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் சாராய போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளார்கள்.

மேலும் வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதினை உடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த வானமும் முல்லைத்தீவு பொலீஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Next Post

திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் குருநகரில் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!!

Mon Jun 14 , 2021
Post Views: 349 அனுமதிக்கும் அதிகமாக பலர் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார […]

Today Political Cartoons of Sri Lanka