முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்!!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Next Post

நான்கு முக்கிய மாவட்டங்களில், நாளை 12 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும்..!!

Fri Jul 9 , 2021
Post Views: 740 நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி யாழ் மாவட்டத்தில் ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதி சந்தி, பாசையூர், பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோயில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி, உதயபுரம், […]

Today Political Cartoons of Sri Lanka