யாழில் அளவுக்கதிகமாக மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு நேர்ந்த கதி!
யாழ்.நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் அளவுக்கதிகமான மதுபானம் கொள்வனவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தின் பின்னர் நாடு முழுவதும் இன்று பயணத்தடை தளர்த்தப்பட்டு மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாழ்.நகரில் உள்ள மதுப்பான கடைகளும் திறக்கப்படிருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருவர் கொள்வனவு செய்து கொண்டு செல்லக்கூடிய நிர்ணய அளவுக்கு மேல் மதுபானம் இருந்தாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதானவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.