தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!

வவுனியா – கற்குளி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது அவர் கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் (வயது 51) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Next Post

மதுப்பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி - இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி..!!!

Wed Jun 16 , 2021
Post Views: 263 இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இதனிடையே சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக; இணையத்தளம் ஊடாக ;சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுவரி திணைக்கள […]

Today Political Cartoons of Sri Lanka