கொவிட் தொற்றால் பலியான மற்றுமொரு கர்ப்பிணி பெண்..!!

கண்டி-மாவனெல்ல பகுதியில் கொவிட் தொற்று காரணமாக 30 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அரநாயக்க தல்கஸ்பிட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குறித்த கர்ப்பிணி பெண் சென்றுள்ளார்.

இதன்போது திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 21 ஆம் திகதி மாவனெல்ல வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பி.சி.ஆர் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் ஊடாக தெரியவந்துள்ளது.

Next Post

மாமியாரை துஷ்பிரயோகம் செய்த மருமகனுக்கு விளக்கமறியல்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 373 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (22) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராய்ச்சிலாகே கருணாபால (56 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka