குடும்பத்தகராறு காரணமாக, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்பு!!!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது. சாம்பல்தீவு- நான்காம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Next Post

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு ஆடை கொடுத்த அமைச்சருக்கு வந்த சிக்கல்....!!

Fri Jul 9 , 2021
Post Views: 812 நேற்றையதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்த குறித்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எனது ஆடைகளை கிழத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். […]

Today Political Cartoons of Sri Lanka