பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்குவதற்கு முன்வந்திருந்தது.
எனினும், கோவிட் பெருந்தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன.
சீனா, அமெரிக்கா, இலங்கை போன்ற 32 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் மாம்பழங்களை அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளது.
எனினும்இ இந்த அன்பளிப்புக்களை அநேகமான நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அன்பளிப்பினை பெற்றுக் கொள்வதற்கு முடியாமையையிட்டு வருந்துவதாக இலங்கைஇ கனடா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவித்துள்ளன.
கடந்த காலங்களில் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணும் நோக்கில் காலத்திற்கு காலம் மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.