மதுப்பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி – இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி..!!!

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன.

இதனிடையே சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக; இணையத்தளம் ஊடாக ;சிறப்பங்காடிகள் மூலம் மதுபான விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Post

4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் - பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை....

Wed Jun 16 , 2021
Post Views: 357 4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் […]

Today Political Cartoons of Sri Lanka