நாளை முதல் முழுமையாக முடங்குகிறது…!!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை(1) இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன்,

பொதுமக்கள் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Post

மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்..!!

Wed Jun 30 , 2021
Post Views: 406 இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இன்றைய தினம் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றதாகவும் அவர் […]

Today Political Cartoons of Sri Lanka