கோடீஸ்வர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் கும்பல்..!!

இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய இளம் பெண்ணை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது.

பொலநறுவை பிரதேச சபைக்கான நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 15 வயதுடைய சிறுமியை இளம் பெண் என கூறி அந்த வர்த்தகருக்கு விற்பனை செய்தவரும் மெல்டா என்ற பெயருடைய இந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் கையடக்க தொலைபேசியை தங்கள் பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்த போது புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விற்பனை செய்ய தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Next Post

நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்!!!

Fri Jul 9 , 2021
Post Views: 628 நோர்வே நாட்டில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். புலம் பெயர்ந்து நோர்வே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த [வயது 40 ] என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர். ஆவார் இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]

Today Political Cartoons of Sri Lanka