நாட்டின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையானதும் முன்யோசனையற்றதுமான தீர்மானங்களால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கும் வகையிலான பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது.
அதேவேளை கொவிட் – 19 வைரஸ் தொற்றானது நாடுமுழுவதும் மிகவேகமாகப் பரவிவருகின்றது.