புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்..!!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.

புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்றைய தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.

அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Next Post

சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு - இலங்கையில் சம்பவம்....

Thu Jun 17 , 2021
Post Views: 579 ஹபரடுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 90இ000 ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேற்படி சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Today Political Cartoons of Sri Lanka