திருமண விழாவுக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கு அடி வயிற்றில் வலி – அதிர்ச்சி சம்பவம்….

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை மயக்கமருந்து கொடுத்து கடத்தி, சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால், 6 மாதத்துக்கு பிறகு சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அவள் கர்பமாக இருக்கிறாள் என தெரியவந்த பிறகு இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு டிசம்பரில் போபாலில் உள்ள நசிராபாத்தில் இருக்கும் தனது பாட்டியின் வீட்டிற்கு, ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்ததார். விழாவில் கலந்து கொண்ட ஒரு சிறுவன், அவளுக்கு மயக்க மருந்து கலந்த தேனீரைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தேநீர் அருந்தியபின், சிறுமி தன் சுயநினைவை இழந்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுவன் அவளை ஒரு வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனது அடிவயிற்றில் வலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அங்கு அச்சிறுமி உண்மைகளை உடைத்த பிறகு, மருத்துவமனை மூலமாக பிப்லானி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிப்லானி பொலிசார் ஒரு ஜீரோ எஃப்.ஐ.ஆரை பதிவு செய்து வழக்கை பெரேசியா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து நசிராபாத் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நசிராபாத் பொலிசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர்.

Next Post

யாழில் நிகழ்ந்த சம்பவம் - உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்!!!

Tue Jun 15 , 2021
Post Views: 606 யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுருவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேலணையின் சாட்டி கடற்கரையோரத்தில் திமிங்கிலம் ஒன்று உயிரிருடன் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்கள் இணைந்து அதனை படகில் கட்டியிழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை ஊர்காவற்றுறையின் சுருவில் கரையோரத்தில் திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. சாட்டி கரையோரத்தில் […]

Today Political Cartoons of Sri Lanka