கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் முதல் மரணம் – இந்தியா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது.

ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அரசு குழு (ஏஇஎப்ஐ) தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் அனாபிலாக்ஸிஸ் காரணமாக முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்து இந்த குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது போன்ற 31 பக்கவிளைவு கொண்டவர்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டது

இந்த குழுவின் மார்ச் 8, 2021 இல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக இறந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

Next Post

கொரோனா தொற்றால் இரு நாட்களில் நால்வர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்..!!

Tue Jun 15 , 2021
Post Views: 498 யாழில்.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த ஒருவரே யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் உயிரிழந்தவருடன் கடந்த இரு தினங்களில் யாழில் நான்கு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Today Political Cartoons of Sri Lanka