பிள்ளையுடன் குளத்தில் நீராடியவரைக் காணவில்லை – கிளிநொச்சியில் துயரச் சம்பவம்..!!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

இன்று பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்று தெரியவந்துள்ளது.

Next Post

மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவரிடம் பரிதானம் பெற்ற பொலிஸார் - கோப்பாயில் நிகழ்ந்த சம்பவம்....

Tue Jun 15 , 2021
Post Views: 379 பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் பரிதானம் பெற்ற கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பரிதானம் பெற்றுள்ளனர். பணத்தை […]

Today Political Cartoons of Sri Lanka