நாடாளவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. 23ம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி […]

கொவிட் நோயுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் ஒன்று சிறுவர்களுக்கு பரவுவதாக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துன்னார். இதுவரையில் அவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களுக்கு கொவிட் தொற்றி 14 நாட்களின் பின்னரே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. விசேடமாக 5- 15 வயதிற்குட்பட்டவர்களுக்கே இந்த நிலைமை ஏற்படுகின்றது. இதனை […]

யாழ்ப்பாணத்தில் உள்ள திருமணமான பெண் கிராமசேவையாளர் ஒருவரிடம் நெருங்கிப்பழகிய இளைஞன் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இவருக்கு அயலில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு அவ் இளைஞனுக்கு பல பரிசுப் பொருட்களையும் குறித்த பெண் வாங்கிக் கொடுத்துள்ளதாக இளைஞனின் நண்பர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

தொலைபேசியில் கதைத்த காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து, உயிரை மாய்க்க முயன்ற 14 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களின் முன் பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்கள் நீடித்த காதல் உறவைஇ சில தினங்களின் முன் இளைஞன் துண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவிஇ […]

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்குள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், பேருந்து கட்டணங்களை […]

நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி […]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 749 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,169 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 237,582 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 2,134 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி, கொவிட்-19 தொற்றிலிருந்து […]

50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர், ஹிக்கடுவை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சீருடையில் இருக்கும் போதே ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். இந்த அதிகாரி […]

Today Political Cartoons of Sri Lanka