கட்டட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி தவறி வீழ்ந்து உயிரிழப்பு – யாழில் சம்பவம்…!!

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

“வீட்டுக் கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார்.

உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்

Next Post

தனி விமானத்தில் கேரளாவிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்இ லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்.....

Wed Jun 16 , 2021
Post Views: 526 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாராஇ ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானதுஇ அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்தஇ காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். […]

Today Political Cartoons of Sri Lanka