50 கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி கைது..!!

50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர், ஹிக்கடுவை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சீருடையில் இருக்கும் போதே ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இந்த அதிகாரி தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

இன்று இதுவரையில் 2,169 பேருக்கு கொரோனா....

Sat Jun 19 , 2021
Post Views: 276 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 749 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,169 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 237,582 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 2,134 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். […]

Today Political Cartoons of Sri Lanka