யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்கள் ஆக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பிள்ளைகள் தமது தாயாரை கைவிட்டு சென்ற நிலையில், அது தொடர்பில் அயல்வீட்டினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த யயோதிப தாயாரின் பிள்ளைகள் அவருடன் தங்காத நிலையில் இரவு வேளைகளில் விரக்தியில் கத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தும் அவர்கள் திருமணம் முடித்து சென்றுவிட்டதால் தாயை சரியாகப் பார்க்க முடியாமல் போனதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை அந்த வயோதிப மாது திட்டித் தீர்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.” இந்நிலையில் தாய்க்கு இந்த நிலைமை வந்ததும் பக்கத்து வீட்டுக்காரரால் தான் தாய்க்கு பிரச்சினை ஏற்பட்டதாக அவரது பிள்ளைகள் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் கோப்பாய் பிரதேச செயகத்தில் முறையிட்டும் பயன்கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அவரின் முறைப்பட்டினை அடுத்து குறித்த தாயின் பிள்ளைகளை அழைத்த கோப்பாய் பொலிசார் இயலாத தாயை பார்ப்பது பிள்ளைகளின் கடமை அதை தாங்கள் சரிவர செய்ய வேண்டும் எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக மேலும் தெரியவருகின்றது.