நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி – மற்றுமொருவர் படுகாயம்..!!

நெல்லியடி – வதிரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அருகில் உள்ள வளைவில் நடைபெற்றது.

சம்பவத்தில் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கண்ணா என அழைக்கப்படும் வீரபத்திரபிள்ளை தங்கேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருடன் பயணித்த பேரம்பலம் மயூரன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சையிக்கிளில் இருவரும் பயணித்தவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

மாணவர்களுக்கு Data கட்டணம் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி வசதி - நாமல் ராஜபக்க்ஷ அறிவிப்பு..!!

Tue Jun 22 , 2021
Post Views: 1,343 எந்தவொரு Data தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். இதேபோன்று, எல்.எம்.எஸ் முறையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய திட்டம் ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற […]

Today Political Cartoons of Sri Lanka