நடிகை பியூமி ஹன்சமாலிக்கு ஆடை கொடுத்த அமைச்சருக்கு வந்த சிக்கல்….!!

நேற்றையதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.

கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்த குறித்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது ஆடைகளை கிழத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். இதுவா சட்டம்? இதுவா நீதி? நியாயத்திற்காக போராடினால் இப்படியா செய்வார்கள்? நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என நீதிமன்றம் கூறியது. எனினும் பேருந்து ஒன்றில் எங்களை கடத்தி செல்வது போன்று கொண்டு செல்கின்றார்கள். எங்கு கொண்டு செல்கின்றார்கள் என தெரியவில்லைஎனவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எனக்கு ஆடை கொண்டு வந்து தாருங்கள்” எனவும் அவர் காணொளியில் கூறியுள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நடிகை பியூமி ஹன்சமாலிக்கு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்கையில் ஆடை கொடுத்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Next Post

யாழ் நடுவீதியில் மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய கணவனின் கொடூரம்..!!

Mon Jul 12 , 2021
Post Views: 1,049 நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் […]

Today Political Cartoons of Sri Lanka