யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/ 131 சாவற்காடு கிராமம் இன்று புதன்கிழமை(16) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
சாவற்காடுக் கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் போது அதிகளவானோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதையடுத்து மேற்படி பகுதியினை முடக்குவதற்குச் சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்ததையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.