கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விவசாய காணிக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்டபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.