மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி பெண் பலி!

கிரான்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விவசாய காணிக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்டபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Next Post

இராணுவ வீரர் பசியில் இருந்த முதியவருக்கு செய்த செயல்....

Wed Jun 16 , 2021
Post Views: 313 15.6.2021 அன்றைய தினம் வேலைநிமிர்த்தம் சக ஊழியருடன் காத்தான்குடியில் கடமையில் இருந்த போது மனதை நெகிழ வைத்த சம்பவமே இது, பசியுடன் வீதியில் அமர்திருந்த நாதியற்ற முதியவர் ஒருவருக்கு, தனக்காக வழங்கப்பட்ட உணவு பொதியினை தானம் செய்து, தான்பசியுடன் கடமையில் ஈடபடும் இராணுவ வீரர் “சரிந்த குமார”… இன்னும் உலகில் மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கான சான்று நண்பர் ஒருவரினால் முகநூலில் பதியப்பட்ட பதிவானது பலரது […]

Today Political Cartoons of Sri Lanka