ரயில் தண்டவாள கிளிப்புகளைத் திருடிய நால்வர் உள்பட ஐவர் கைது – யாழில் சம்பவம்….

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் ரயில் பாதையில் இருந்த தண்டவாள பொருத்துக் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கி குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கிளிப்புகள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், திருடப்பட்ட தொடருந்து தண்டவாள கிளிப்புகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருந்த ஐந்து சந்தியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளிப்புகள் கழற்றப்பட்ட நிலையில் ரயில் பயணித்தால் தடம்புரளும் ஆபத்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Next Post

கொரோனா தொற்றால் மேலும் 51 பேர் பலி!

Thu Jun 17 , 2021
Post Views: 312 நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 51 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

Today Political Cartoons of Sri Lanka