கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாகஇ இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர்இ சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட வௌவாலோடைஇ திராய்க்கேணிஇ அம்பாறை வீதிஇ ஹிலால்புரம்இ வங்கலாவடிஇ ஹிஜ்ராபுரம் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (16) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர் 02ம் குறுக்கு தெரு பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும்இ மின் தடைப்படும்.
வியாழக்கிழமை (17) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட நிந்தவூர் முஸ்தபாபுரம் பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.
சனிக்கிழமை (19) கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட தரவைக்கோவில், அம்மன்கோவில், பீச் வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, கடற்கரைப்பள்ளி, வீவீ வீதி, வொலிவேரியன், கல்முனைக்குடி, ஒலுவில் கிராமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, காரைதீவு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், மின் தடைப்படும்.