பலாங்கொடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, ரஸ்ஸாகல பிரதேசத்தில் பேருந்து ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
பிரதேசத்தின் தேயிலை தோட்டமொன்றில் பணியாற்றிய பணியாளர்கள் கடமை முடிந்து வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது சாரதி தவிர்ந்த வேறும் எவரும் பேருந்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.