150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து சாரதி பலி – பலாங்கொடையில் நிகழ்ந்த சம்பவம்…!!

பலாங்கொடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை, ரஸ்ஸாகல பிரதேசத்தில் பேருந்து ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பிரதேசத்தின் தேயிலை தோட்டமொன்றில் பணியாற்றிய பணியாளர்கள் கடமை முடிந்து வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது சாரதி தவிர்ந்த வேறும் எவரும் பேருந்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Next Post

நடிகை மீரா மிதுன் தற்கொலை மிரட்டல்...!!

Thu Jun 17 , 2021
Post Views: 282 தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் […]

Today Political Cartoons of Sri Lanka