இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை – நுவரெலியாவில் சம்பவம்…!!

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், தனிப்பட்ட தகராரே கொலை இடம்பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம், வீட்டின் சமயலறையில் துணிகளால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Next Post

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கையில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை – சிவப்பு எச்சரிக்கை!!

Tue Jun 29 , 2021
Post Views: 481 இலங்கையில் கோவிட் – 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகிறது. தரவுகளில் இதனை நிரூபிக்கும் கட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Today Political Cartoons of Sri Lanka