கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி..!!!

கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள்,இரும்பு , கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Next Post

நாளை முதல் முழுமையாக முடங்குகிறது...!!

Wed Jun 30 , 2021
Post Views: 474 அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை(1) இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் […]

Today Political Cartoons of Sri Lanka