கொரோனா தொற்றினால் யாழில் மேலும் நால்வர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று 44 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 912ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post

கொவிட் தொற்றால் பலியான மற்றுமொரு கர்ப்பிணி பெண்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 483 கண்டி-மாவனெல்ல பகுதியில் கொவிட் தொற்று காரணமாக 30 வயதுடைய கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அண்மையில் அரநாயக்க தல்கஸ்பிட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குறித்த கர்ப்பிணி பெண் சென்றுள்ளார். இதன்போது திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 21 ஆம் திகதி மாவனெல்ல வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா […]

Today Political Cartoons of Sri Lanka