யாழ் அரசடி பகுதி விடுவிப்பு..!!

யாழ் நல்லூர் அரசடிப் பகுதி இன்று முதல் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் அரசடியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்தப் பகுதி கடந்த மே 28ஆம் திகதி முடக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் அரசடிப் பகுதி விடுவிகப்படுகின்றது.

அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post

பயணத்தடை தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு..!!

Fri Jun 18 , 2021
Post Views: 340 தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்பில் சற்று முன் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பயணத்தடை தளர்த்தப்படும் போதும் மாகாணங்களுக்கு […]

Today Political Cartoons of Sri Lanka