பிரபல தமிழ் பட நடிகரின் மனைவி கொரோனாவால் மரணம்..!!

பிரபல திரைப்பட நடிகரான ஹம்சவர்தன் மனைவி திடீரென்று உயிரிழந்ததையடுத்து, திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இந்த கொரோனா காலகட்டத்தில், பல திறமை வாய்ந்த திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பெரும் சோகத்தில் உள்ளது.

இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் காலமானார். இந்நிலையில், தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஹம்சவர்தன் என்பவரின் மனைவியான சாந்தி ஹம்சவர்தன் (42) இன்று காலமானார்.கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஹம்சவர்தன், மானசீக காதல், வடுகப்பட்டி மாப்பிள்ளை, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன் உள்பட ஒரு சில படங்களை நடித்தும் தயாரித்தும் உள்ளார்.

தற்போது இவர் பீற்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இது விரைவில் திரைக்கு வரவிருந்த நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது. மேலும், அவரின் மனைவி எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.

Next Post

யாழில் அளவுக்கதிகமாக மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு நேர்ந்த கதி..!!

Tue Jun 22 , 2021
Post Views: 686 யாழில் அளவுக்கதிகமாக மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு நேர்ந்த கதி! யாழ்.நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் அளவுக்கதிகமான மதுபானம் கொள்வனவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தின் பின்னர் நாடு முழுவதும் இன்று பயணத்தடை தளர்த்தப்பட்டு மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாழ்.நகரில் உள்ள மதுப்பான கடைகளும் திறக்கப்படிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருவர் கொள்வனவு செய்து கொண்டு செல்லக்கூடிய நிர்ணய […]

Today Political Cartoons of Sri Lanka