மாமியாரை துஷ்பிரயோகம் செய்த மருமகனுக்கு விளக்கமறியல்..!!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (22) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராய்ச்சிலாகே கருணாபால (56 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-:
குறித்த சந்தேக நபர் தனது மனைவியின் தாயாரான 70 வயதுடைய பெண்ணை மது போதையில் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

30 டன் நிறையுடைய பாரவூர்தி உடல் மீது விழுந்ததில் வாகன திருத்துநர் பலி..!!

Wed Jun 23 , 2021
Post Views: 363 மெதிரிகிரிய பகுதியில், பழுதடைந்த பாரவூர்தியொன்றின் அடிப்பகுதியில் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில், குறித்த பாரவூர்தி சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மெதிரிகிரியஇ திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து பொலனறுவை நோக்கி 600 சீமெந்து மூடைகளுடன் பயணித்த மேற்படி பாரவூர்தியின் சில்லு ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துஇ வாகன திருத்துநரான இந் […]

Today Political Cartoons of Sri Lanka