தொழிற்சாலையில் திடீரென சுகயீனமடைந்த 60 பேர்..!!

மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 60 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

இன்றைய தினம் திடீர் சுகயீமடைந்த ஊழியர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொழற்சாலை ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் இன்றைய தினமும் ஊழியர்கள் பல்வேறு உடல் நிலை பாதிப்புகள் ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

எனினும் ஊழியர்கள் ஆபத்தான நிலைமையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி காரணமாக இந்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? - இன்று விசேட கூட்டம்..!!

Fri Jun 18 , 2021
Post Views: 390 நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, எதிர்வரும் நாட்களில் வெளியாகின்ற பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே, எதிர்வரும் 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் […]

Today Political Cartoons of Sri Lanka