யாழ். மீசாலை பகுதியில் நடந்த சம்பவம் – இராணுவ வாகனம் விபத்து..!!

யாழ். மீசாலை பகுதியில் இராணுவத்தினரின் சிறியரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லையெனவும் வாகனம் முன்பக்கம் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Post

இணையவழி மதுபான விற்பனை - கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் அதிரடி அறிவிப்பு...!!

Thu Jun 17 , 2021
Post Views: 279 இணையவழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கோவிட் தடுப்புச் செயலணி அனுமதி மறுத்துள்ளது என அதன் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பயணக் கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம் ஊடாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்குக் கலால் திணைக்களம் திட்டமிட்டது. இதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது. எனினும், இந்தத் திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் […]

Today Political Cartoons of Sri Lanka