4 நாட்களாக 2 குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு மது விருந்துக்குச் சென்ற தாய் – பசியால் 11 மாத குழந்தை உயிரிழப்பு.
கணவரைப் பிரிந்து வாழும் 25 வயதான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபான விருந்துக்குச் செல்வதற்காக தன்னுடைய 11 மாதமான குழந்தையையும் 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.
4 நாட்களின் பின் வந்து குழந்தைகளை பார்த்த போது பசியால் 11 மாத குழந்தை இறந்துவிட்டது . அதேநேரம் 3 வயது குழந்தையும் பசியால் பலவீனமுற்ற நிலையில் இருந்துள்ளது.
அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி பேட்டியளித்த போது தாய் தனது கடமையைச் செய்யத் தவறியதால் அவருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்துள்ளது . எனக் குறிப்பிட்டுள்ளார்